வீட்டில் ஒருவர் -ஸ்ரீதர் சதாசிவன் [Short story published on Thendral Tamil magazine (Feb 2011)] கிர்ர்ரர்ர்ர்ர், கிர்ர்ரர்ர்ர்ர் - கார்த்திக்கின் சட்டைப் பையில் வைப்ரேட் மோடிலிருந்த செல்போன் சத்தம் போட்டது. யமுனாவிடமிருந்து கால். கார்த்திக் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். அனாவசியமாக அலுவலக நேரத்தில் கால் செய்பவள் அல்ல யமுனா. அவளும் இந்நேரம் ஆபிசில் ரொம்பவே பிசியாக இருப்பாள். நிச்சயம் ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும். "ஸாரி, ஐ ஹாவ் டு டேக் திஸ்" என்று எழுந்து கான்பரன்ஸ் ரூமைவிட்டு வெளியே நடந்தான் கார்த்திக். "என்னம்மா? " என்றான் போனை காதில் வைத்து. "கார்த்திக், அசோசியேஷன் ஆபிசிலேர்ந்து கால். பிரசாத் பேசினார். வித்யாவுக்கு வீட்டை எப்படி நீங்க வாடகைக்கு விடலாம்னு ஒரே கூச்சல். நாளைக்கு இதைப்பத்தி பேச ஸ்பெஷல் மீட்டிங் ஏற்பாடு பண்ணி இருக்காராம். நம்ம இரண்டு பேரையும் வரச்சொன்னார், சாயங்காலம் ஆறு மணிக்கு" யமுனாவின் குரலில் பதட்டம். "ஹ்ம்ம். நினைச்சேன்" கார்த்திக் பதறவில்லை. "அவர் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கும்போல" "ரிலாக்ஸ். நாம எதிர்பார்த்ததுதானே? பதறாதே" "எதிர்வீட்டு குமரகுரு ரொம்பவே கோபத்துல இருக்கானாம். அந்த ஆளு எப்போடா நம்மகூட சண்டை போடலாம்னு அலைவான்" சலித்துக் கொண்டாள் யமுனா. "அதனால? போடட்டும். நம்ம வீடு. யாருக்கு வாடகைக்கு விடணும்னு நாமதான் முடிவு செய்யணும். அசோசியேஷன் சட்டப்படி நாம செஞ்சதுல எந்த தப்பும் இல்லை. மீட்டிங் போட்டா என்ன? பயமா? பாக்கலாம்" உறுதியாய் சொன்னான் கார்த்திக். "சரி. ஈவினிங் பேசலாம். எனக்கு வேலை எக்கச்சக்கம்." "சரிம்மா" என்று போனை துண்டித்தான் கார்த்திக். ***** கார்த்திக்கும் யமுனாவும் கணிப்பொறி துறையில் பணியாற்றுகிறார்கள். பல வருடங்கள்